Bharti Hexacom IPO ஏப்ரல் 3-ம் தேதி அன்று வெளியாகிறது!

தொலைத்தொடர்பு ஆபரேட்டர் Bharti Airtel-ன் துணை நிறுவனமான Bharti Hexacom-ன் IPO ஏப்ரல் மாதம் 3-ம் தேதி பொது சந்தாவிற்காக திறக்கப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்ட Red Herring Prospectus (RHP) படி, மூன்று நாள் Initial Public Offering (IPO) ஏப்ரல் மாதம் 5-ம் தேதி முடிவடைகிறது. மேலும் இந்த சலுகையின் படி Anchor Book ஏப்ரல் 2-ம் தேதி ஒரு நாளுக்கு மட்டும் திறக்கப்படும். 2024-25 நிதியாண்டில் இது தான் முதல் IPO-வாக இருக்கும்.

முதல் பொது வெளியீடு என்பது ஏற்கனவே உள்ள பங்குதாரர்களின் Telecommunications Consultants India Ltd மூலம் 7.5 கோடி பங்குகள் (15 சதவீத பங்குகளை குறிக்கும்) மட்டும் விற்பனைக்கு உள்ளன.

முன்னதாகவே அறிவிக்கப்பட்ட 10 கோடி மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகளில் இருந்து Offer For Sale (OFS) அளவில் இருந்து 7.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. IPO முழுவதும் Offer For Sale (OFS) ஆக இருப்பதால் முழு வருமானமும் விற்பனை செய்யும் பங்குதாரர்களுக்கு மட்டும் செல்லும் மற்றும் இந்த வெளியீட்டிலிருந்து இந்த நிறுவனம் எந்த நிதியையும் பெறாது.

Bharti Hexacom தனது கண்காணிப்பு கடிதத்தை மார்ச் மாதம் 11-ம் தேதி அன்று மூலதன சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI இடமிருந்து பொது வெளியீட்டை வெளியிடுவதற்காகப் இதை பெற்றது. Bharti Airtel Promoters இந்த 70 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது மற்றும் மீதமுள்ள 30 சதவீத பங்குகளை அரசு வழி நடத்தும் Telecommunications Consultants India Ltd வைத்திருக்கிறது.

Bharti Hexacom ஒரு தகவல் தொடர்பு தீர்வு வழங்குநராகும். இது ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நுகர்வோர் மொபைல் சேவைகள், நிலையான தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை இது வழங்குகிறது.

வலுவான டாப்லைன் மற்றும் செயல்பாட்டு புள்ளிவிவரங்கள் இருந்தாலும் இந்த நிறுவனம் FY23-ல் நிகர லாபம் ரூ. 549.2 கோடியாக ஆண்டுக்கு ஆண்டு 67.2 சதவீதம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் இதனுடைய லாபமான ரூ.1,951.1 கோடி பெரிய சரிவு இந்த தளத்தால் ஏற்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகள் BSE மற்றும் NSE-யில் பட்டியலிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *